Tuesday, August 27, 2013

Jo wife 1

அப்போயெல்லாம் நீங்க எங்க வீட்டில இருப்பீங்க. உங்களோட சாரீஸ் , சுடிதார்ஸ் , செர்டிபியூகெட்ஸ் யெல்லாம் எங்க வீட்டு பீரோல இருக்கும். உங்களோட பைபிள் என் அலமாரியில் இருக்கும். நீங்க உபயோகிற ஷாம்ப் , ஷோப் யெல்லாம் எங்க பாத்ரூம்ல இருக்கும். நீங்க உபயோகிற எங்க வீட்டு சீப்பு ல உங்களோட சில உதிரங்கள் கவிதையாய் இருக்கும். அப்போயெல்லாம் உங்களை சேலை தான் கட்டணும் சொல்லி பெரிய மனுசியாக்க விரும்பலை. சுடிதார்ல தான் இருப்பீங்க . என் அறை முழுக்க உங்க வாசம் தான் இருக்கும். நீங்க என் மனப்பூர்வ மனைவியாகி விட்டதற்கான நான் அணிவித்த அழகான பொன் சங்கிலி உங்க கழுத்துல இருக்கும். வாரத்தில ஏதோ ஒரு நாள்ல உங்க அழுக்கு சுடிதார் யெல்லாம் சேர்த்து எங்க தங்கச்சியோட பங்கு போட்டு துவைப்பீங்க. பின்னே ராணி மாதிரி ரொம்ப நேரம் குளிப்பீங்க. பிறகு வேற சுடி போட்டு கிட்டு , எங்க தோட்டத்தில பூத்திருக்கிற ரோஜா அல்லது மல்லிகை பூக்களையோ உங்க கூந்தலில் வைச்சுப்பீங்க . . . உங்க முகத்தில் சந்தோஷம் தெரியும். அனிச்சையாக உங்க கன்னத்தில் குழி விழும். அதிகமாக சிரிப்பீங்க. அப்போ யெல்லாம் பயங்கர அழகாக இருப்பீங்க. சின்ன குழந்தைகளாக மாறி இருப்போம். நிறைய விளையாடுவோம். என்னோட மெத்தையில் உங்களுக்கும் உரிமை இருக்கும். அப்படியொரு நாளில் நீங்கள் மெத்தையில் காலை நீட்டி அமர்ந்திருப்பீங்க. உங்க பாதங்களுக்கு பக்கத்தில் நானும் அமர்ந்திருப்பேன். உங்க பாதங்களை நான் மென்மையாக வருடுவேன். நீங்க உடனே கூட இதை செய்வீங்க , உங்க மென் பாதங்களால் என்னோட நெஞ்சிலோ அல்லது வயிற்றிலோ அன்பால உதைப்பீங்க. சிரிப்பீங்க. எங்க அம்மா பார்த்தா கூட தனியா கூப்பிட்டு கேட்பாங்க , " உதைக்கிறலாடா அவ , பொன்னுங்க பையனை உதைக்க கூடாது தெரியுமா, அது தப்பு " , " சரிங்க அம்மா " மட்டும் சொல்வேன். நான் எதையும் கேட்க மாட்டேன். அப்போ உங்க நினைப்பு முழுக்க மனசில இருக்கும். இரவு சாப்பாடு அப்பா , அம்மா சாப்பிட்ட பிறகு , நாம சாப்பிடுவோம். அப்போ யாருக்கும் தெரியுமா , காலை மிதிப்போம் , கிள்ளி விளையாடுவோம். நீங்க பிசைந்து வைச்சா சாப்பாட்டை என் தட்டுல வைப்பீங்க. சாப்பிடுவோம், மெதுவாக சாப்பிட்டு முடிப்போம். அப்படியே இதே மாதிரி கொஞ்ச நாட்கள் போகும். . உங்களுக்கு ஒரு நாள் காய்ச்சல் அடிக்கும். கொஞ்சம் வீரியமான காய்ச்சல் , டாக்டர் கிட்ட போவோம். உங்க இடுப்புல ஊசி போட்ட பின் , வலிக்காம இருக்க பஞ்சால நான் தேய்ச்சு விடுவேன் நினைக்கிறேன் . அப்போ நான் நினைப்பேன் , அன்பிற்காக இந்த உலகத்தில எல்லாமே. உங்களை நானும் , நீங்களும் என்னை எப்போதோ சந்தித்தது இந்த ஈடு இணையற்ற அன்பை பெறுவதற்காக தான் நினைப்பேன். . பின் ஒரு நாள் , அப்போதைய நாள்கள் நாம தனியா ஒரு வீட்ல இருப்போம் நினைக்கிறேன். ஒரு நாள் காலையில் இப்படி கேட்பீங்க , " டேய் சும்மாதான்டா இருக்க வாய்க்கலுக்கு கூட்டுட்டு போடா , எல்லா துணிகளை துவைக்க கொஞ்சம் வசதியா இருக்கும் " பிறகு போவோம் , உங்க உடல் சேலைக்கு பழகியிருக்கும். நீங்க அணிந்த சேலையை தளர்ந்து கிட்டு துணிகளை துவைப்பீங்க. பொன் காலை சூரிய வெளிச்சம் உங்க பின் முதுகில் விழுந்திருக்கும். அழகாக இருப்பீங்க. வறண்ட சிகையாய் உங்க கூந்தல் இருக்கும். முன் சில முடிகள்ல சோப்பு நுரை ஒட்டியிருக்கும் கவிதையாய் இருக்கும் . உங்க பாதி உடைகள் நனைஞ்சு பயங்கர அழகாக இருப்பீங்க. நீங்க என் துணிகளை துவைக்கிறதை பெருமையாக நினைப்பேன். பிறகு உங்க ஈரமான உடைகளை வெயிலை உலர்ந்தி விட்டு எப்போதோ அந்த இடத்தை விட்டு வண்டியில் கிளம்பி இருப்போம். . எப்போவது இரண்டு பேருக்கும் சின்ன மானஸ்தபம் ஏற்படும். சண்டை வருவது சகஜம். சண்டை போடுவோம். நான் வெளியே எங்கயாவது போயிட்டா , வழியில் யெல்லாம் அழுத படி அம்மா வீட்டுக்கு போயிருவீங்க. உங்க அம்மா கேட்பாங்க , " நீதான் அவன் தான் வேணும்னு ஒரு இந்து பையனை போய் கட்டணுன , எல்லாத்தையும் தாங்கிதானே ஆகனும் " நீங்க சொல்வீங்க , "இப்போ கூட அவன் என்னைய ரொம்ப லவ் பண்றான் அம்மா. அவன் இனி மேலும் கண்டிப்பாக என்னை நல்ல பாத்துப்பான். அவன் இப்போ வந்து கூப்பிட்டா போயிருவேன். " பிறகு கொஞ்சம் அழுவீங்க. நானே உடனே வருவேன். உங்க அம்மா மறைமுகமா திட்டுவாங்கா. வெளிப்படையாக கூட. நான் தாங்கிகுவேன். உங்களை திரும்ப கூட்டுட்டு போயிருவேன். இதுக்கெல்லாம் அழுதுட்டு இங்க வரணுமா னு சொல்லி சமதானம் படுத்துவேன். அந்த நாளுக்கு பிறகு எப்பவும் போல தான் நாட்கள் போகும். . பிறகு எப்பவாவது திரும்பவும் நானும் நீங்களும் உங்க வீட்டுக்கு போவோம். நல்ல காஸ்லியான ப்ளைன் புடவை அணிந்திருப்பீங்க. காதுல புது தங்க ஜிமிக்கி யெல்லாம் அணிந்து அழகாக இருப்பீங்க. உங்க முகம் பொலிவா இருக்கும் . உங்க கடைக்கு போவீங்கா , " அப்பா கொஞ்ச நேரத்திற்கு கடை நான் பார்த்துகறேன் " கேட்பீங்க. யாராவது தெரிஞ்சவங்க கடைக்கு வந்து , "நல்லா இருக்கியாம்ம " உன்னை கேட்பாங்க. அந்த நொடிகள் எனக்கு தெரியலை ஆனால் என்னை பத்தி நினைப்பீங்க. .

No comments:

Post a Comment