Saturday, August 3, 2013

16,ஜூன்,2013

காதலில் இது மென் உருகுதல் . என் படைப்புகளை கொண்டாடும் ஒரு பெண்ணை நேரில் கண்டு நட்பாகி விட்ட இந்த இரண்டு தினங்களில் , சொல்ல முடியாத உணர்வுகளுக்கு உள்ளாகி விட்டேன். அவளிடம் கேட்க தேவையில்லை , என் படைப்புகளை பிடிக்கும் என்றால் என்னையும் பிடிக்கும் யென்று. கிறிஸ்துவ பெண் அவள், தேகமும் முகமும் தேர்ந்த கிறிஸ்துவ நிறம். சிரிக்கும் போது தற்காலிகமாக கன்னத்தில் விழும் குழிகள் . ஒவல் ஃபேஸ் , அவள் கழுத்து செயின், அவள் அழகு என்பதை நிர்ணயிக்க இதுவே போதுமானது. @ @ @ அவள் முகத்தை பார்த்து பேச முடியவில்லை , தடுமாற செய்கிறது.அவள் அழகு என்பதை தாண்டி , என் மேலுள்ள மரியாதையால் நான் வார்த்தைகளால் தடுமாற கூடாது என்ற எண்ணம் என்னை நிலைய குனிய வைக்கிறது. எங்கே நான் அவளை காதலித்து விடுவேனோ யென்று பயந்துக்கொண்டிருக்கி­றேன். அதேநேரத்தில் என்னிடம் தலைக்கணமும்இருக்கிறது. நான் காதலிக்கிறேன்யென சொல்லி , அவளிடம் சம்மந்தம் வாங்குவது எளிது யென்று முட்டாள் தனமாக நினைத்துக்கொண்டிருக்­கிறேன். எவ்வளவு பெரிய காரியம்.! அதைவிட காதல் விவகாரம் எங்கள் வீட்டில்தெரிந்ததால் பெரிய பிரச்சினை எதிர்கொள்ள வேண்டி வரும் அது தான் பெரிய பிரச்சினை யென நினைத்துக்கொண்டிருக்­கிறேன். மனமுவந்து எந்த வார்த்தையும் அவளிடம் சொல்ல இந்த நேரத்தில் அது அதிருப்தி தருகிறது @ @ @ எனக்கும் அவளுக்கும் எதோ இருப்பதாக சக மாணவர்கள் பேசினால் கூட அது சுவராசியமாகவும் , பிரமிப்பாகவும் இருக்கும் யென்று கூட தோன்றுகிறது. யாருமற்ற கிளாஸ் ரூம்மில் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் பகிர்ந்துக்கொண்ட போது , அவள் யாரென்றும் , எப்படிபட்டவள் யென்றும் தெரியாது. எல்லாம் கடந்து அவளிடம் நெருக்கமாக இருப்பதாக உணர்கிறேன். நான் அவளிடம் எப்போதோ கூறியது போல் என்னை பற்றி அவள் சித்தியிடம் கூற இனி விஷயம் கூட இருக்கலாம் @ @ @ திடிரென்று ஒரு நினைவு , ஒரு ஏழு வருடங்கள் கழித்து என் அறையில் அவள் இருப்பதாகவும் , அவள் சிவப்பு நிற சேலை அணிந்திருப்பாதகவும்.­ அதன் ஒரங்களில் வெள்ளி நிற சாரிகைகளால் அவளுக்கே யென நைந்த சேலையில் , அப்போது கூட நான் எழுதுவதை நிறுத்தவில்லை. நான் எதோ டிக்டெட் செய்துக்கொண்டிருப்பத­ாகவும். அவளும் அதை எழுதுவதாக. அவள் முகத்தில் முன்னை விட அழகு கூடியிருந்தது. வேறு ஒரு அழகாக இருந்தாள். விஷயமே வேறு. அவள் _ . ஏன் இப்படி நினைக்க தோன்றுகிறது. கடவுளே ! ஒரே நேரத்தில் பிறப்பாகவும் மரணமாகவும் வெளிப்படும் உணர்வுகள். இன்னும் இரண்டும் ஆண்டுகள் அவளோடு இந்த படிப்பை எப்படி கடப்பேன். எந்த எந்த உணர்வுகளுக்கு உள்ளாவேன்.

No comments:

Post a Comment