Saturday, August 3, 2013

My unusual letter for you jo( 27.6.2013 )

அன்புள்ள ஜோ . . . , உங்களை இன்று சந்தித்தேன். சிவப்பு நிறத்திலும் , அதன் ஒரங்களில் தங்க சாரிகைகளால் ஆன சுடிதார் அணிந்திருந்தீர்கள். மல்லிகை பூக்களால் அலங்கரிக்கப்பட்ட கூந்தல் , இரண்டு புருவங்களுக்கிடையே குங்குமமோ (அ) செயற்கை பொட்டோ அற்ற வெற்றிடத்தை அழகின் நேர்த்தி என்பதை உங்கள் இன்று பார்த்த பின்பு தான் கண்டுக்கொண்டிருக்கிற­ேன். எனினும் அது உங்கள் கிறிஸ்துவ முறை சார்ந்தது. மொத்தத்தில் , ஒரு பூச்செடியின் முந்தைய நாள்களின் கவனம் பெறாத மொட்டாக இருந்த இன்று முழுமையாக மலர்ந்திருக்கும் பூ வா உங்கள் முகம் பொலிவோடு பூத்திருக்கிறது. . காலையிலே பார்த்து விட்டேன் உங்களை. அதற்கு பிறகு உங்கள் இடம் காலியாக இருந்தது. உங்களை காணவில்லை. வகுப்பிருக்கும் வாரண்டாவில் உங்கள் நிழல் தெரியாத யென்று காத்திருந்தேன்.பிறகு வந்தீர்கள். உங்கள் இடத்திற்கு , மனம் பரவசம் ஆனது. வருகை பதிவேட்டில் உங்கள் பெயரைஅழைக்கும் போது ஒரு பெருமிதம் . அட அட ! இவள் என் படைப்புக்களை விரும்பும் பெண். உங்கள் பெயரை அழைக்கும் அந்த விரிவுரையாளர்க்கு என்ன தெரியும் உங்களை பற்றி. இந்த வகுப்பறையில் நீங்கள் சாதாரண மாணவி என்பதை தவிர. நான் சொல்லட்டுமா உங்களை பற்றி அந்த விரிவுரையாளரிடம் , நீங்கள் எப்படி பட்டவள் யென்று . என்னறியும் அறியமால் மனதிற்குள்பெருமிதமாக சொல்லிக்கொண்டேன். மென்மையாக உங்கள் வருகையை பதிவுசெய்தீர்கள். நீங்கள் இங்கே இருப்பதை நினைக்கும் போதே , ஏதோ புரியாத சந்தோஷம் கொள்கிறேன். . எனக்கு பக்கவாட்டில் உள்ள சாளரத்திற்கு பக்கத்தில் அமர்ந்திருக்கிறீர்கள­். என் வார்த்தைகளுக்கு முகம் கொடுத்துபேசும் ஒரே பெண் நீங்கள் , என்னை திரும்பி பார்க்க நேரிடலாம் , அப்போது அசட்டு தனமாக எதையும் செய்து விட கூடாது என்பதில் பொறுப்பாக இருக்கிறேன். . அடுத்த நடந்த பாட வகுப்பில் , மேடம் சொன்னதை அத்தனையும் குறிப்பு எடுத்து வைத்து கொண்டுபொறுப்பாக பதில் சொன்னீர்கள். பிறகு நான் இப்படி நினைத்து கொண்டேன் : . நீங்கள் பொறுப்பான அழகான பெண். உங்களுக்கு நெருக்கமான ஆண் நண்பர்கள் , எனக்கு பழக்கமான அதேஆண் நண்பர்கள் இந்த விஷயம் தெரிந்தால் , உறுதியாக எனக்கு மட்டும் பழி வந்து சேரும். அழகானபெண் என்றால் அபலை யென அந்த பெண்களுக்கு எதிராக நடக்கும் சின்ன பிரச்சினைக்கு கூட குரல் கொடுக்க குறிப்பிட்ட ஆண் நண்பர்கள் எல்லாம் இடத்திலும் இருக்கிறார்கள். அந்த ஆண் நண்பர்கள் இப்படி நினைக்கலாம் ," ஜோவிற் எதுவும் தெரியாது , அவள்நல்லவள் . ஏதோ நான் தான் தவறான கண்ணோட்டத்தில் பழகி கொண்டிருப்பதாக " வெளிப்படையாக இந்த கேள்வியை கேட்டு விட்டால் ,என் முன்னே . நான் என்னையே வெறுத்து விடுவேன். உங்களுக்கு எதிராக நான் நடப்பதாக யாரவது குறிப்பிட்டாள் , என்னால் தாங்க முடியாது ஜோ. அப்படி நடந்தால் , யார்க்கும் முகம் கொடுத்து பேச மாட்டேன். என் முகத்தை பார்த்து அருவறுப்பேன். இந்த கொஞ்சம் கல்லூரி நாட்கள் நரகமாக தெரியும். . அடிப்படையாக , உங்களுக்கு எதிராக செயல்படும் மனம் கிடையாது. அந்த தைரியம் கிடையாது. உங்களுக்காக எழுதப்பட்ட இந்த வரிகள் கூட தவறாக இருப்பதாக கூறி அழிக்க சொன்னால் கூட , இப்போதே அழித்து விடுவேன் ஜோ உங்களுக்காக. நீங்கள் வெறுக்கும் எதையும் என்னால் செய்ய முடியாது. நான் மதிக்கும் பெண் நீங்கள் என்ற காரணத்தினால் ஜோ. . மதியம் சந்தித்தேன் . எங்கள் வரிசையில் ஒரு நண்பன் உங்களை அழைக்கும் குரல் , நீங்கள் என்ன பேசுவீர்கள் ? கூர்மையாக கவனித்துக்கொண்டிருந்­தேன். அதுஏனோ நீங்கள் என் வகுப்பறையில் இருக்கும் போது , என் அணுகு முறை மாறுகிறது. . லேப் வகுப்புகளில் , உங்களுக்கு எதிராக இடம் கிடைத்தது. நிமிர்ந்து பார்த்தால் நீங்கள் தெரிந்தீர்கள். உங்கள் நெற்றியில் , கிறுக்கியதாக விழும் சில முடிகளை பார்த்தேன். கவிதையாக இருந்தது. உங்கள் பக்கத்திலிருந்த என் தோழியிடம் பேசினேன். பதற்றமாக இருந்தது. உங்கள் முன் வார்த்தைகள் தடுமாறி விடுவேனோ என்று. நீங்கள் சிரித்ததாக தெரிந்தது ஜோ. . கல்லூரி முடிந்து பிறகு பார்க்கவேயில்லை. உங்களுக்கு முன்னே பேருந்து ஏறிவிட்டேன். ஆனால் உங்களை பற்றி நினைத்தேன். இரவு வாடிக்கையான விசாரிப்புகளுக்கு பின் , சில sms தவிர , பின் ஒழுங்காக எந்த sms யும் உங்களிடமிருந்து பெற முடியவில்லை. sms காலியாகி விட்டதாக சொன்னீர்கள் ஜோ. பொறாமையாக இருந்தது. யாரிடம் பேசினீர்கள் யென கேட்க தோன்றியது . பின் எதையும் மீறக்கூடாது யென கேட்கவில்லை. பிறகு இரவில் எப்போது நினைத்தேன் என்று தெரியவில்லை. எப்போதோ தூங்கி விட்டிருந்தேன். . அவ்வளவுதான் இந்த ஒரு நாள் ஜோ. . நன்றி . இப்படிக்கு தங்கள் உண்மையுள்ள , உங்கள் நண்பன்.

No comments:

Post a Comment