Saturday, August 3, 2013

6,ஜூலை,2013 . A poem about her husband

உங்க கண்ணில் தெரிவான் ஜோ அவன் , அந்த நாள் தொலைவில் இல்லை. அவன் அன்பானவன் , மென்மையானவன் , எதையும் உங்களுக்காக விட்டு கொடுப்பான் , எதையும் செய்வான் உங்களுக்காக ஜோ. அதிக கோபம் கொண்டவன் , மென்மையானவன் இதில் யார் பலமானவன் நினைகிறீங்க ஜோ. ?நான் சொல்றேன் ஜோ . மென்மையானவன். உங்க வாழ்க்கையில் வந்த அந்த மென்மையானவன் ஜோ. அவன் கஷ்டத்தை உங்க கிட்ட காட்ட மாட்டான் ஜோ. நீங்க கண்டுபிடிக்க முடியாது. . அந்த மென்மையானவனை பெரியவங்களுக்கு மட்டுமில்லை. உங்க வீட்டில உங்க அக்காவோட குழந்தைகள் வளர்ந்த அந்த குழந்தைகளுக்கு பிடிக்கும் ஜோ. நீங்க தா அவனுக்காக காத்திருக்கனும். நீங்க தா சொல்லனும். "எப்பபாரு சின்ன குழந்தைக்களோட விளையாட்டு னு , என்னை கூட கவனிக்காம " அப்படினு நீங்க தா அவனை கன்டிக்கனும் ஜோ. . நீங்க வாழ போன வீட்டில அவன் உடன்பிறப்பு சார்ந்த அந்த பெண்கள் உங்களோட சண்டை , சச்சரவு செய்தால் , உங்களுக்கு மனஸ்தாபம் ஏற்பட்ட அவன் உங்க கண்ணீரை தொடைச்சிட்டு , உங்க தோள் மேல சாய்ந்து சொல்வான். " விட்டு கொடுப்பது தா அன்பு. எனக்காக ப்ளீஸ்" சொன்ன பிறகு அவன் கண் கலங்கியிருக்கும் அதை தவறாம கவனிப்பீங்க ஜோ. . உங்களுக்கு குழந்தை பிறந்து பின் நீங்க சில மாதம் அம்மா வீட்டில் இருப்பீங்கா ஜோ . ஒரு நாள் முற்பகலில் அவனை பார்க்க ஏங்கி நினைப்பீங்க ஜோ , உங்க முன்னாடி வந்து நிற்பான் ஜோ காதலோட . எவ்வளவு தொலைவையு தாண்டி வருவான் ஜோ. உங்களை பார்க்க . நீங்க உங்க மனசில காதலை மறைச்சிட்டு கேப்பீங்கா ஜோ . " வேலைக்கு போகலையா ? "

No comments:

Post a Comment