Tuesday, August 27, 2013

Jo 2

என் வாழ்க்கையில் ஒரு மகிழ்ச்சியான தருணத்தை நான் கடந்திருப்பேன், அந்த சில நொடிகளை . " டேய் நெஜமா ஐ ஆம் கன்சுவிவ் டா " சொல்வீங்க. அந்த சந்தோஷமான நொடிகளுக்கு பிறகு சில மாதங்களுக்கு கழித்து , என் அம்மா கிட்ட போன் ல கேட்பேன் இப்படி , " அவ நைட் யெல்லாம் ஒரு மாதிரி திணுசா படுத்து தூங்கறம்மா , அவளுக்கும் உள்ள குழந்தைக்கும் ஏதாவது ஆயிரும்னு பயப்படறேன், இதனால அதிகமாக சண்டை போடறாம என் கூட . ,எனக்கு எப்படி தூங்குன வசதியோ அப்படி தான் தூங்க முடியும் அப்படிங்கறா எனக்கு வலி அதிகம் ஆயிருச்சு . நா எவ்வளவு கஷ்டப்படறேன் தெரியுமாடா உனக்குனு கேட்கறா , முகத்தை பாவமா வைச்சிட்டு . அவ முகத்தை பார்க்க முடியலை . நீதான்ம்மா எதாவது சொல்லனும்னு " கேட்பேன். அப்படியே கொஞ்சம் நாட்கள் கொஞ்சம் கஷ்டங்களை நம்ம கடந்திருப்போம். பிறகு நாம எதிர்பார்த்த அந்த நாள் வரும் , கொஞ்சமான கஷ்டமான தருணங்கள் . நான் அப்போ வேலைக்கு போயிருப்பேன். " டேய் வலி அதிகமாயிருச்சு , சீக்கிரம் வா முடியலை " சொல்வீங்க. அப்புறம் ஹாஸ்பிஸ்டல்க்கு போவோம். பிறகு கொஞ்ச நேரத்திற்கு நான் தைரியமாக இருந்து ஆகனும். பிறகு ஒரு நல்ல செய்தி . நர்ஸ் வந்து சொல்வாங்க , " உங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு . ஆனா நீங்க இப்போ அவங்களை பாக்க முடியாது . அவங்க வலி மயக்கதல உங்களை தான் கண்டபடி திட்டறாங்க " , " என்னையவா எதுக்கு திட்டணும் னு " கேட்பேன். " நீங்க தான் அவங்க வலிக்கு காரணம் அதனால தான் " " என்னனு திட்டறா " நான் கேட்பேன். " நீங்க நாயாம். அப்புறம் ஏதோ ஏதோ கெட்ட வார்த்தையில் திட்டனுங்கா. உங்களை பார்க்க allow பண்ண கூடாதுங்கற . நீங்க தனியா வலியோட அவங்களை விட்டுடு போயிடிங்கனு புலம்புறங்கா , என்னைய அப்படியே விட்டுறங்கா , என்னல குழந்தை பெத்துக்கா முடியாதுனாங்க , அக்கா உங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்குனு சொன்னா , நம்பவே மாட்டிங்கறாங்கா அண்ணா. இல்லவே இல்லைங்கறாங்க . கை , காலை தூக்க முடியலைனங்கா , அப்புறம் செருப்பு எடுக்க சொன்னங்கா , உங்களை அடிக்கிறக்கமமா " அப்புறம் உங்களை பார்க்க வருவேன். அப்புறம் அந்த குட்டி தேவதையை நான் பார்க்கனும் வருவேன். நீங்க சிரிப்பீங்க . "அவ்வளவு தான்டி இதுக்கு போய் பயந்தட்டா " அப்புறம் நடந்ததெல்லாம் நல்ல விஷயம். அப்புறம் அவளுக்கு பேரானந்தி னு பெயர் வைப்போம். அவ வாழ்க்கை முழுக்க ஆனந்தமா இருக்கனும் அதனால். முக்கியமான விஷயம், ஆனந்தி படு வாலு. இந்தா ஸ்கூலெல்லாம் அவளுக்கு படு போர் ஆம். என் மொபைல் , வண்டி சாவி யெல்லாம் எடுத்து ஒளிச்சு வைக்கறா ஸ்கூல் வேண்டாம்னு . என் பேச்சை கேட்கவே மாட்டிங்கறா. நீதான் அவளை ஸ்கூலுக்கு அனுப்பனும். அவ்வளவுதான்.

No comments:

Post a Comment